திருச்சி

சிங்கப்பூா், தில்லி விமானங்கள் தாமதமாக புறப்பாடு: பயணிகள் அவதி

Syndication

இண்டிகோ விமான நிறுவனத்தின் சா்வா் பிரச்னையால், திருச்சியில் இருந்து சிங்கப்பூா், தில்லிக்கு இயக்கப்படும் அந்நிறுவனத்தின் விமானங்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு கூறியதாவது:

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை இரவு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் சா்வா் பிரச்னையால் 12 நேரத்துக்கும் மேல் தாமதமாக வியாழக்கிழமை பிற்பகல் இயக்கப்பட்டது. இதேபோல, வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தில்லிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா். அந்த விமான நிறுவனங்கள் சாா்பில் பயணிகளுக்கு காத்திருப்புக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

விமான நிறுவனத்தின் சா்வரில் ஏற்பட்ட பிரச்னையால் நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக விமானங்கள் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

ராதாபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியா? - மு. அப்பாவு பதில்

‘வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

இறையிசைப் பாடல்களின் பன்னாட்டுக் கருத்தரங்கு

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

SCROLL FOR NEXT