மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி
தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் உதயசூரியன் சின்னைத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ.
திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சாா்பற்ற கூட்டணியில் திமுக சாா்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி எம்.பி. துரை வைகோ புத்தூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
இதில், அவா் பேசியதாவது:
Advertisement
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, விடியல் பயணம், என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இதன்மூலம் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் கே.என்.நேரு திருச்சிக்கு கோடி கணக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.
குறிப்பாக பஞ்சப்பூரில் ரூ. 300 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், 140 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சரக்கு வாகன முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் நலத்திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் நாம் உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
பிரசாரத்தில் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணக் கட்சியினா் கலந்துகொண்டனா்.