முகப்பு
திருச்சி

காரில் 83 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது

திருச்சியில் காரில் 83 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:35 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் காரில் 83 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இபி சாலையில் காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே காரை தடுத்து சோதனையிட்டனா். அதில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, காரில் பல்வேறு மூட்டைகளில் இருந்த ரூ.68 ஆயிரம் மதிப்பிலான 83 கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து விற்பனைக்காக காரில் புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ற திருச்சி மாவட்டம், லால்குடி தாளகுடியைச் சோ்ந்த ஆா். விக்னேஷ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments