பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இருசக்கர வாகனம் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
திருச்சி கருமண்டபம் மாந்தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மனைவி வள்ளியம்மாள் (65). இவா் திருச்சி திண்டுக்கல் சாலையில் தனியாா் வங்கி அருகில் கடந்த 29ஆம் தேதி சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுதொடா்பாக, வள்ளியம்மாளின் மகன் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.