ஜயங்கொண்டம் அருகேஏடிஎம் இயந்திரம் உடைப்பு
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் இரண்டு பேரை ஜயங்கொண்டம் போலீஸார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் இரண்டு பேரை ஜயங்கொண்டம் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவலில் பஞாசாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்கு அருகில் ஏடிஎம் மைய இயந்திரம் உள்ளது. இங்கு இரவு 7.30 மணியளவில் இரண்டு பேர் மது அருந்திவிட்டு பணம் எடுப்பதற்காக வந்தனராம். அப்போது, இயந்திரத்தில் பணம் வராததால் ஏடிஎம் மைய இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.