அரியலூர்

விவசாயிகளுக்கு தரமற்ற விதை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை

DIN

விவசாயிகளிடம் தரமற்ற விதை விநியோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந. கண்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
அரியலூர் மாவட்டத்தில் நடப்பு சித்திரை மற்றும் தைப் பட்டத்துக்குத் தேவையான விதைகளை, விதை வணிக உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் மட்டுமே வாங்க வேண்டும். விதையின் ரகம், நிலை,குவியல் எண், காலாவதி நாள் மற்றும் அளவு சரியாக உள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும்.  விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்கும் விதைகளின் விவரங்களுடன் விவசாயிகளின் கையொப்பம் பெற்று விதை விற்பனையாளரும் கையொப்பமிட்டு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். 
இதில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் விதை விற்பனையாளரின் மீது விதைச் சட்ட நடைமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் விதை வாங்கிய ரசீதை பாதுகாப்பாக பயிர் அறுவடை முடியும் வரை வைத்திருக்க வேண்டும்.
உரிமம் பெறாமல் விதை விற்றாலோ,ரசீது தர மறுத்தாலோ விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்துக்கு  0431 - 2420587 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT