அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர்ளுக்கான பணியிடை பயிற்சி ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
இதில் கணிதப் பாடத்தை பயனுள்ளவகையில் மாணவர்களுக்கு கற்பித்தல், பாடக்கருத்துகளை படங்கள் மூலமாகவும், ஏரியல் உபகரணங்களை பயன்படுத்தி கணித சூத்திரங்கள் வருவித்தல், கணினி வழிக்கற்றல் மற்றும் கற்பித்தல், மாணவர்களை திறனாய்வு மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஒளி ஆய்வுசெய்தார்.