அரியலூர்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பாப்பாங்குளத்தில் ஆர்ப்பாட்டம்

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அடுத்த பாப்பங்குளத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 பாப்பாங்குளத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக அங்கு புதிய கட்டடம் கடந்த மாதம்  கட்டப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என வலியறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பால் அங்கு கடை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடை திறப்பதற்கான பூஜை நடைபெற்றதாக அறிந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கடை முன் திரண்டனர். ஆனால் மாலை 4 மணி வரை கடையை திறக்க யாரும் வராததால் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT