அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே தகராறில் பெண்ணைத் தாக்கிய இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருமானூர் அருகிலுள்ள நாயக்கர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி வேம்பு(40). அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தரமூர்த்தி(33). இருவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் தென்னை மட்டையால் வேம்புவை சுந்தரமூர்த்தி தாக்கியுல்ளார். பலத்த காயமடைந்த வேம்பு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வேம்பு அளித்த புகாரின் பேரில் திருமானூர் போலீஸார் வழக்கு பதிந்து சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.