அரியலூர்

பெண்ணை  தாக்கியவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே  தகராறில் பெண்ணைத் தாக்கிய  இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருமானூர் அருகிலுள்ள நாயக்கர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி வேம்பு(40). அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தரமூர்த்தி(33). இருவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில்  தென்னை மட்டையால் வேம்புவை சுந்தரமூர்த்தி தாக்கியுல்ளார். பலத்த காயமடைந்த வேம்பு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வேம்பு அளித்த புகாரின் பேரில் திருமானூர் போலீஸார் வழக்கு பதிந்து சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT