அரியலூர்

உடையார்பாளையம் அருகே பைக் மீது லாரி மோதி 3 பேர் காயம்

DIN

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் குணசேகரன்(63). விவசாயி. செவ்வாய்க்கிழமை இவரும், இவரது உறவினர்களான கடம்பூரை சேர்ந்த காசிநாதன் மகன் ரவி(45), குடிகாட்டை சேர்ந்த வீராசாமி மகன் கலியபெருமாள் ஆகிய 3 பேரும் தத்தனூரில் இருந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, மூர்த்தியான் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.  இதில் பலத்த காயமடைந்த குணசேகரன், ரவி, கலியபெருமாள் ஆகிய 3 பேரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.  போலீஸார் வழக்குப் பதிந்து  லாரி ஓட்டுநரான தேனி மாவட்டம் கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனராஜ் மகன் பிரசாத்(25) என்பவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

SCROLL FOR NEXT