மக்கள் குறை கேட்புநாள் கூட்டத்தில் 377 மனுக்கள்
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 377 மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 377 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் தலைமை வகித்து,பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அளித்த 377 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணையின்படி நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அ.பூங்கோதை உள்ளிட்ட பல்துறை அலுலர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.