ஜூலை 25-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ஜூலை 25 பிற்பகல் 3 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பாலாஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.