ஓசோன் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் அங்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, தேசிய பசுமைப் படை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இ. கார்த்திகேயன் தலைமை வகித்து தொடர்ந்து, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செ.மணிகண்டன் விழிப்புணர்வுப் பேரணியை ஒருங்கிணைந்து நடத்தினர். பேரணியின் போது, ஓசோனின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்திச் சென்றனர். பேரணியானது பள்ளியில் தொடங்கி,பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.