அரியலூர்

அரியலூர் ரயில் நிலையத்தில் உணவகம் அமைக்கக் கோரிக்கை

DIN

அரியலூரில் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உணவகம் அமைக்க வேண்டுமென மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருமானூரில் மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்கத்தின் மாதாந்திர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில், அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உணவகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் மு.வரதராசன் தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பொருப்பாளர்கள் பஞ்சநாதகணபதி, சுயம்பிரகாசம், பாக்கியராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT