அரியலூர்

பயங்கரவாதிகள் வேரோடு அழிக்கப்பட வேண்டும்

DIN

பயங்கரவாதிகள் வேரோடு அழிக்கப்பட வேண்டும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன்
(33) என்ற சி.ஆர்.பி.எப்., வீரரும் வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இவரது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று ஆறுதல் கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோ தொடர்ந்து, சிவசந்திரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிவசந்திரனின் 2 வயது மகனை தூக்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து வைகோ கூறியது:
பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். அவர்கள் வேரோடு அழிக்கப்பட வேண்டும். சிவசந்திரன் தனது மகனை ஐபிஎஸ் ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஒரு மகனை இழந்த அவரின் பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காகச் செல்கிறேன் எனக் கூறியிருக்கிறார் சிவசந்திரன். 
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காந்திமதிக்கு நல்ல ஒரு அரசு வேலையை ஏற்படுத்தித் தரவேண்டும். கிராம மக்களும் சிவசந்திரனுக்கு சிலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர் என்றார். 
தொடர்ந்து, சிவசந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT