அரியலூர்

அரசு கலைக் கல்லூரியில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

DIN

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
கல்லூரி முதல்வர்(பொ) ஜெயகுமார் கலந்தாய்வைத் தொடக்கி வைத்தார். இளங்கலை வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் 100 மாணவ, மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். வியாழக்கிழமை (மே 16) அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், வெள்ளிக்கிழமை (மே 17) தமிழ், வரலாறு, பொருளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் காலை 9 மணிக்கு அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு வரவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT