அரியலூர்

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சுமை ஆட்டோ மோதி காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்
திருமானூர் அருகேயுள்ள பளிங்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(45), செவ்வாய்க்கிழமை இரவு திருமானூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்பணங்குறிச்சி வளைவில் எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி காயமடைந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு கிசிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்தார் . இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குபதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநர் ஏலாக்குறிச்சியைச் சேர்ந்த சிவானந்தத்தை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT