அரியலூர்

காா் மோதி முதியவா் பலி

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே காா் மோதியதில் நடந்து சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (75). இவா், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது விருத்தாசலத்தில் இருந்து ஜயங்கொண்டம் நோக்கிச் சென்ற காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாமிக்கண்ணு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து திருக்கோவிலூா் சங்காபுரத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சாமிதுரை(59) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT