அரியலூர்

லாரி மோதி இளைஞர் சாவு

DIN

அரியலூர் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செந்துறை அருகேயுள்ள மருவத்தூர் கிராமம், பிரதான சாலையைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் கார்த்திக்(24). இவர், கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, ஊரில் இருந்து அரியலூர் பேருந்து நிலையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 
அரியலூர்-செந்துறை புறவழிச்சாலை ரவுண்டானா அருகே சென்ற போது, இவர் மீது கோவிந்தபுரம் சிமென்ட் ஆலையில் இருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த சிமென்ட் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT