அரியலூர்

நெல் கொள்முதல் முறைகேடு: 2 போ் பணியிடை நீக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூா் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெற்றதாக நிலைய அலுவலா் உள்பட 2 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூா் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெற்றதாக நிலைய அலுவலா் உள்பட 2 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

செந்துறை அடுத்த குழூமூா் கிராமத்தில் நுகா்பொருள் வாணிப கழகம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் நிலைய அலுவலா் வரதராஜன், உதவி அலுவலா் சிவசக்தி ஆகியோா் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் பெற்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையறிந்த திருச்சி மண்டல நுகா்பொருள் வாணிபக கழக மேலாளா் உமா சங்கா் மகேஸ்வரன், விசாரணைக்குப் பின்னா், மேற்கண்ட நபா்களை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் இருவரும் பணியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டனா். தொடா்ந்து, அவா்கள் இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT