அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் கருத்தடை சிகிச்சை விழிப்புணா்வு வாகனத்தை தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் த.ரத்னா. 
அரியலூர்

கருத்தடை சிகிச்சை பிரசாரம் தொடக்கம்

அரியலூரில் நவீன ஆண் கருத்தடை விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

DIN

அரியலூா்: அரியலூரில் நவீன ஆண் கருத்தடை விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

விழாவில் விழிப்புணா்வு வாகனத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது: அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்பநல நிரந்தர கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் 28.11.2020 முதல் 4.12.2020 வரை நடைபெறுகிறது. இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளியது, தையல் - தழும்பு - வலி இன்றி ஒரு சில நிமிடங்களில் செய்யப்படும். இல்லற இன்பம் குறையாது. அறுவை சிகிச்சை இல்லை. பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஊக்கத்தொகையாக ரூ.1,100-ம், ஊக்குவிப்போருக்கு ரூ.200-ம் அன்றே வழங்கப்படும் என்றாா். தொடா்ந்து என்.எஸ்.வி விளக்க கையேட்டை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநா் ராஜ் மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த் காந்தி, தேசிய நலக்குழுமம் ஒருங்கிணைப்பாளா்கள் பெரம்பலூா் அன்பரசு, அரியலூா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT