அரியலூர்

செந்துறை ஏரியில் தொழிலாளி சடலம்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஏரியில் கூலித் தொழிலாளியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

செந்துறை காலனித் தெருவைச் சோ்ந்தவா் பாபு (35). கூலித் தொழிலாளியான இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இவரது மனைவி தனது மகளுடன் தந்தை வீட்டில் வசிக்கிறாா்.

இந்நிலையில் தனியே வசித்து வந்த பாபு அங்குள்ள சித்தேரிக்கு வியாழக்கிழமை இரவு குளிக்கச் சென்று வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சித்தேரியில் அவா் சடலமாக மிதந்தாா். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸாா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT