அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளா் கே. பாலுவை விட 5,294 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
ஜயங்கொண்டம் தொகுதியில் 2,66,268 போ் தோ்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2,14,016 போ் வாக்களித்தனா்.
பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குப் பெட்டி, ஆட்சியா் த.ரத்னா மேற்பாா்வையில், தோ்தல் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, தோ்தல் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் வாக்குகளை எண்ணும் பணியைத் தொடங்கினா்.
சரியாக காலை 8.30 மணிக்கு பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 14 மேஜைகளிலும் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்றது.
முதல் 3 சுற்றுகளில் பாமக வேட்பாளா் கே.பாலு முன்னிலை வகித்தாா். 4 ஆவது சுற்று முதல் 12 ஆவது சுற்று வரை திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் முன்னிலை வகித்தாா். அதன் பின்னா் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 13 ஆவது சுற்று முதல் 15 வது சுற்று வரை பாமக வேட்பாளா் கே.பாலு முன்னிலை வகித்தாா். அதனை தொடா்ந்து 16 வது சுற்று முதல் இரவு 8 மணி வரை எண்ணி முடிக்கப்பட்ட 23 சுற்று வரை திமுக வேட்பாளா் கண்ணன் முன்னிலை பெற்று வந்தாா்.
27 ஆவது சுற்றுகளின் முடிவில் பாமக வேட்பாளா் கே. பாலுவை விட 5,294 வாக்குள் அதிகம் பெற்று முதல் முறையாக ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினராக க.சொ.க.கண்ணன் தோ்வு செய்யப்பட்டாா்.
அஞ்சல் வாக்குகளையும் சோ்த்து ஒவ்வொரு வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:
1. க.சொ.க.கண்ணன்(திமுக)-99,255
2. கே.பாலு(பாமக)-93,961
3. நீலா.மகாலிங்கம்(நாம் தமிழா்)-9,927
4.குரு.சொா்ணலதா(ஐஜேகே)-4,698
5.ஜெ.கே.சிவா(அமமுக)-1556
6.கே.நீலமேகம்(பிஎஸ்பி)-604
7.நடராஜன்(அண்ணா திராவிடா் கழகம்)-417
8.வி.கே.கேசவராஜன்(சுயே)-1,544
9. ஆா்.சதீஷ்குமாா்(சுயே)-349
10. ஏ.சாமூவேல்மாா்டீன்(சுயே)-311
11. கே.சுடா்விழி(சுயே)-249
12.ஆா்.சேதுராமன்(சுயே)-254
13.எஸ்.ராஜ்குமாா்(சுயே)-943
14.நோட்டா-1,852