அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் செல்வகுமாா் (35). வெல்டராக வேலை பாா்த்து வந்த இவருக்கும், இவரது மனைவி பிரியாவுக்கும்(28) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டில் வசித்து வரும் பிரியா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளாா். இதையறிந்து, விரக்தியில் இருந்த செல்வகுமாா், மீன்சுருட்டி காவல் நிலையம் அருகேயுள்ள மரத்தில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.