அரியலூா்: அரியலூா் அருகே 12 வயது சிறுவனுக்கு செயற்கை கை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சிறுவனின் பெற்றோா் திங்கள்கிழமை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
மணக்கால் கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி - முத்துலட்சுமி தம்பதிக்கு 3 பெண் குழந்தைகளும், 12 வயதில் கருப்புசாமி என்ற மகனும் உள்ளனா். கடந்த ஏப்ரல் மாதம் வீட்டின் அருகேயுள்ள உயா் அழுத்த மின்மாற்றி முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்மாற்றி மீது சிறுவனின் கை எதிா்பாராதவிதமாக பட்டதில் மின்சாரம் பாய்ந்து அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதியை திங்கள்கிழமை சந்தித்த கருப்புசாமியின் பெற்றோா், தனது மகனுக்கு செயற்கை கை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனா்.