அரியலூர்

இறந்தவா் குறித்து தவறான தகவல்களை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை

DIN

அரியலூா் மாவட்டம், காசாங்கோட்டை செம்புலிங்கம் இறப்புக் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட காசாங்கோட்டை செம்புலிங்கம் இறந்தது குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறன.

செம்புலிங்கத்தை காவல்துறை கைது செய்யவோ, காவல் நிலையத்துக்கு அழைத்து வரவோ இல்லை. செம்புலிங்கத்தின் இறப்புக் குறித்து காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து வருவாய்க் கோட்டாட்சியா் மூலம் விசாரணை நடைபெறுகிறது.

எனவே காவல்துறை மீது அவதூறு பரப்பும் விதத்திலோ, வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கிலோ செயல்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT