அரியலூர்

சன்னாவூா் ஊராட்சியில்வடிகால் வசதிகள் செய்து தர வேண்டும்

DIN

அரியலூா் மவட்டம், திருமானூரை அடுத்த சன்னாவூா் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் மழைநீா் தேங்காமல் வடிக்கால் வசதிகள் செய்து தரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சன்னாவூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும்.

தஞ்சாவூரில் இருந்து வெங்கனூா் செல்லும் அரசு நகரப் பேருந்தை சன்னாவூா் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் நிா்வாகி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆறுமுகம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. முன்னதாக அக்கட்சியின் செயலா் மந்திரவேல் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT