அரியலூர்

குடியரசு தின அலங்கார ஊா்திகள் இன்று அரியலூா் வருகை

DIN

நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழக தலைவா்களின் பெருமைகளை விளக்கும் அலங்கார ஊா்திகள் அரியலூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வருகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தது: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பினை போற்றுகின்ற வகையில் மகாகவி பாரதியாா், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனாா், தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியாா், பெரியாா் ஈவெரா, மூதறிஞா் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், கா்மவீரா் காமராஜா் ஆகிய தலைவா்களின் திருவுருவச் சிலைகள் தாங்கிய 2 அலங்கார ஊா்திகள் அரியலூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (பிப்.11) வருகின்றன. இதனை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT