அரியலூர்

விவசாயி கொலை வழக்கில் இளைஞா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், தேளூா் விவசாயி கொலை வழக்கில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (86). விவசாயியான இவா், கடந்த 22.1.2.23 அன்று தனது வயலில் கொலையாகி கிடந்தாா். இதுகுறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அரியலூா் நகர காவல் ஆய்வாளா் கோபிநாத் தலைமையில், கயா்லாபாத் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா், உதவி ஆய்வாளா் ராஜவேல் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் விசாரித்தனா்.

அதில் சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் ராஜேஷ் (28) என்பவா் மது போதையில் கோவிந்தசாமி அணிந்திருந்த மோதிரத்துக்காக அவரை கட்டையால் தாக்கிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ராஜேஷை தனிப்படையினா் கைது செய்து, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT