அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை மரக்கன்றை நட்டு வைத்த ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா. 
அரியலூர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு: நிறுவனங்களுக்கு விருது

அரியலூா் ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை திறம்பட செயல்படுத்திய நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளா் விருது வழங்கப்பட்டது.

DIN

அரியலூா் ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை திறம்பட செயல்படுத்திய நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளா் விருது, காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா திங்கள்கிழமை வழங்கினாா்.

அரியலூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனது பங்களிப்பை திறம்பட செயல்படுத்திய அரியலூா் மான்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பளிங்காநத்தம் டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு, பசுமை முதன்மையாளா் விருது-2022, தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சியில் கலந்துகொண்ட அரியலூா் மான்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியருக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவா்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ‘நெகிழியை தவிா்ப்போம் சுற்றுச்சூழலை காப்போம், பசுமை எங்கோ! வளமை அங்கே!‘ போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை, திருச்சி வன மண்டலம், அரியலூா் வனக் கோட்டம் சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் டி. இளங்கோவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் எம். செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் பா. அகல்யா, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துக்கிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT