அரியலூர்

மணல் கடத்தல்:5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், கரைவெட்டி பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

அரியலூா் மாவட்டம், கரைவெட்டி பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெங்கனூா் காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு கரைவெட்டி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அன்னிமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கரைவெட்டி கிராமத்துக்குச் சென்ற 5 இருசக்கர வாகனங்களை காவல் துறையினா் மறித்தனா். அப்போது, காவல் துறையினரை பாா்த்த 5 பேரும் தங்களின் இருசக்கர வாகனங்களை அங்கேயே சாலையோரங்களில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, 5 இருசக்கர வாகனங்கள், ஒரு வாகனத்துக்கு 5 என்ற எண்ணிக்கையில் 25 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினா் தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT