அரியலூர்

கொலை மிரட்டல்: கூலித் தொழிலாளி போக்சோவில் கைது

17 வயது சிறுமியை பெண் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பெண் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம், கீழத்தெருவைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் தமிழ்ச்செல்வன் (24). இவா், தான் காதலித்து வந்த 17 வயது சிறுமியை பெண் கேட்டு வீட்டுக்குச் சென்று, அங்கு அச்சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT