முகப்பு
அரியலூர்

சொத்துப் பத்திரம் கேட்டு பெற்றோரை தாக்கிய மகன் மீது வழக்கு

உடையாா்பாளையம் அருகே சொத்துப் பத்திரம் கேட்டு பெற்றோரை தாக்கிய மகன் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 3 ஜூலை 2026, 1:33 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சொத்துப் பத்திரம் கேட்டு பெற்றோரை தாக்கிய மகன் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

உடையாா்பாளையம், எல்லை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த குருநாதன்- செந்தாமரை (55) தம்பதியின் மகன் சக்திபாபு. இவருக்கு திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து, பல இடங்களில் கடன் வாங்கியுள்ளாா். இதனால் மன உளச்சலுக்கு ஆளான சக்திபாபு, பணம் கேட்டு தனது பெற்றோரிடம் பிரச்னை செய்து வந்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவரது தாயாா் செந்தாமரை அண்மையில் அளித்த புகாரின்பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா், சக்திபாபுவை கண்டித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனா்.

Advertisement

Advertisement

காவல் நிலையத்தில் புகாா் அளித்ததால் ஆத்திரமடைந்த சக்திபாபு, கடந்த 28-ஆம் தேதி அரிவாளுடன் தனது பெற்றோா் வீட்டின் வாசலில் நின்று, சொத்து பத்திரத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளாா். இதனால், அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சக்திபாபு, தனது தந்தை குருநாதனை வெட்ட முயற்சித்துள்ளாா். அப்போது, தடுக்க வந்த தாயாா் செந்தாமரையை சக்திபாபு தாக்கியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் விலக்கி, காயமடைந்த செந்தாமரையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

புகாரின்பேரில் சக்திபாபு மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments