கரூர்

கொலை முயற்சி: வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

DIN

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அடுத்த கீழவெட்டுக்கட்டியைச் சேர்ந்தவர் நல்லமணி (60). விவசாயி. இவருக்கும் பள்ளபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் உலகநாதன் (27) என்பவருக்கும்  கடந்த 4.2.15-இல் பொதுப்பாதை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உலகநாதன் நல்லமணியைக் கத்தியால் தலையில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து உலகநாதனை கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளி உலகநாதனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து உலகநாதன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT