கரூர்

நீட் தேர்வை ஆதரித்து பாஜக ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டும் என வலியுறுத்தி கரூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வை நடைமுறைப்படுத்தக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே உள்ள ஆர்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
நகரத் தலைவர் ஆர். செல்வன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி கோட்ட இணைப் பொறுப்பாளர் கே. சிவசாமி, ராமேஸ்வரம் கோட்ட இணை பொறுப்பாளர் டிஎம். ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முரளிகணேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இதில் நீட் தேர்வுக்கு எதிராக குரல்கொடுக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட பொதுச்செயலர்கள் நகுலன், கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலர் கே.பி. மோகன் உள்ளிட்ட கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT