கரூர்

தினகரன் ஆதரவாளர்கள், போலீஸார் வாக்குவாதம்

DIN

கரூர் சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர் வைக்க போலீஸார்  எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் தினகரன் ஆதரவாளர்கள்  பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனிடையே மதுரை-கரூர் பைபாஸ் சாலையில் சுக்காலியூர் மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை பிளக்ஸ் பேனர் வைக்க முயன்றபோது அங்கு வந்த போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது தினகரன் ஆதரவாளர்கள் ஆளுங்கட்சியினர், திமுகவினர் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் பேனர் வைத்துள்ளனர்.   எங்களுக்கு அனுமதி கிடையாதா என வாதிட்டனர். பின்னர் போலீஸார் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT