வீடு புகுந்து நகை திருடிய இருவர் கைது
கரூர் பசுபதிபாளையத்தில் வீடு புகுந்து 2 சவரன் நகையைத் திருடிய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் பசுபதிபாளையத்தில் வீடு புகுந்து 2 சவரன் நகையைத் திருடிய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் பசுபதிபாளையம் ஆண்டாள்நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரது வீட்டுக்குள் சனிக்கிழமை காலை புகுந்த மர்ம நபர்கள் உள்ளே பீரோவில் இருந்த 2 சவரன் நகையை திருடிக்கொண்டு வெளியே வந்தபோது அங்கு வந்த செந்தில்குமார் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து பசுபதிபாளையம் போலீஸில் ஒப்படைத்தார். போலீஸார் அவர்களைக் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சண்முகசுந்தரம் (18), கரூர் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜா மகன் முருகன் (19) எனத் தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.