முகப்பு
கரூர்

கரூரில் ஆடுகளை திருட முயன்ற இருவர் கைது

கரூரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 8 அக்டோபர் 2018, 8:39 am IST
பகிர்:

கரூரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் அருகே செந்தில்குமார் (36) வளர்த்து வரும்  ஆடுகள் அடிக்கடி காணாமல் போயின. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த இவரது ஆடுகளை  ஆம்னி காரில் வந்த இருவர் கடத்த முயன்றனர்.  
இதைக் கண்ட அப்பகுதியினர் உடனே சுற்றிவளைத்து ஆடுகளை கடத்த முயன்ற கரூர் மூலக்காட்டனூரைச் சேர்ந்த கண்ணன் (32), பசுபதிபாளையம் வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்ரமணி(35) ஆகியோரை பிடித்து கரூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.