காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
கரூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு வட்டார, நகரத் தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கரூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு வட்டார, நகரத் தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிராமம் தோறும் பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, வரும் மக்களவைத் தேர்தலில் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபடுவது மற்றும் சாயக்கழிவு பிரச்னை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் வடிவேல், மகாமுனி, சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிதாக நியமனம் செய்யப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் வட்டார தலைவர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்தினர்.