தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!
தென்மேற்குப் பருவமழை தொடங்குவது பற்றி..
தமிழகத்தில் 5 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஓரிரு மாதங்களாகக் கோடை வெய்யில் சுட்டெரித்துவரும் வருகின்றது. இந்தநிலையில், விவசாயிகளின் முதுகெலும்பாகத் திகழும் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்கும், ஆனால் இம்முறை ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் சூழல் காணப்படுகிறது. முன்னதாக, மே 26-ல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், வட நாடுகளில் அதிகப்படியான வெய்யில் நிலவி வருவதையடுத்து, பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் தொடங்கியது. இந்த நிலையில், அடுத்த 5 நாள்களில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. அதன்படி, தமிழகம், கேரளம், லட்சத்தீவு, அரபிக்கடல், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மழை தொடங்கும்.
Advertisement
Advertisement
கேரளத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. எல்நினோ விளைவு ஜூன் மாதம் வலுவிழந்து செப்டம்பரில் மீண்டும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட (நீண்ட கால சராசரி மழைப்பொழிவில் 92 சதவீதம்) மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும். நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது பற்றாக்குறையாகக் கருதப்படும் என வானிலை ஆராய்ச்சி மையத் தலைவர் கூறியுள்ளார்.