தமிழகத்தில் தாமதமாகும் தென்மேற்குப் பருவமழை!
தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்குவது பற்றி..
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விவசாயத்திற்கும் முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை மே 26-ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 2 முதல் 4 ஆம் தேதிக்குள் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் பருவமழை இந்தாண்டு சற்று தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட, மத்திய பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலைகளுக்கு மத்தியில் பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கேரளத்தில் ஒருசில பகுதிகளில் பலத்த மலை பெய்துவந்தாலும், பருவமழை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கவில்லை. ஜூன் 2 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றானது குறிப்பிட்ட உயரத்தில் சுமார் 27 முதல் 37 கி.மீ வேகத்தில் வீச வேண்டும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடர்ந்த மேகமூட்டம் இருப்பதைச் செயற்கைக்கோள் தரவுகள் உறுதிப்படுத்தும் பட்சத்தில் பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்படும்.
இயல்பைவிட இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவாகப் பதிவாக வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் இந்திய வானிலை கணித்துள்ளது.