கரூர்

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: இருசக்கர வாகனம் பறிமுதல்

DIN


ஜேடர்பாளையத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க வாக்குச் சீட்டுகளுடன் வந்தவர் தப்பியோடியதையடுத்து, அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், வாகனத்தினுள் பணம் மற்றும் வாக்குச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். 
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, ஜேடர்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT