கரூர்

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலன் மரணம்

DIN

கரூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம்  குடித்து தற்கொலைக்கு முயன்றதில் காதலன் இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வயலூரைச் சேர்ந்தவர் சொர்ணம் (45), விவசாயி. இவர் லாலாப்பேட்டை-சீகம்பட்டிச்சாலையில் விவசாயம் செய்துவந்துள்ளார்.  இந்நிலையில் உறவுக்கார விதவை பெண்ணான அதே பகுதியைச் சேர்ந்த அமுதா(40) என்பவரோடு சொர்ணத்திற்கு தொடர்பு ஏற்பட்டதாம். 
இதுகுறித்து சொர்ணம் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து முடிவு செய்துள்ளனர். இதையடுத்து திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்தில் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளனர். 
இதை செவ்வாய்க்கிழமை கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சொர்ணம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அமுதா மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT