கரூர்

பெட்டிக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

DIN

குளித்தலை அருகே அரிவாளைக் காட்டி பெட்டிக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை வட்டம், தாளியாம்பட்டி அய்யனேரியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் நைனார்மலை (32). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல் (27) பீடி வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றாராம். நைனார்மலை பீடிக்கு பணம் கேட்டபோது, தரமறுத்து  கொலை செய்துவிடுவதாகக் கூறி அரிவாளைக் காட்டி சக்திவேல் மிரட்டினாராம். இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தில் நைனார்மலை புகார் செய்தார். 
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT