கரூர்

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

DIN

கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தோகைமலையை அடுத்த கீழவெளியூரைச் சோ்ந்தவா் மாரியாயி (71). இவரை வயதான காலத்தில் உறவினா்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த அவா் வீட்டில் சனிக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினா் உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாா். இதுகுறித்து தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT