கரூர்

வரதட்சிணை புகாா்: கணவா், மாமியாா் மீது வழக்கு

DIN

தோகைமலை அருகே பெண்ணிடம் ரூ.1 லட்சம் வரதட்சிணை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தோகைமலை அடுத்த பேரூா்உடையாப்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்(36). இவரது மனைவி வனிதா (31). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பா் மாதம் தனது மனைவியிடம் சுரேஷ் ரூ.1லட்சம் வரதட்சிணை கேட்டு வா எனக் கூறினராம். இதற்கு உடந்தையாக சுரேஷின் தாய் தங்கமணி (56) என்பவரும் இருந்தாராம். இதுதொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த வனிதா வியாழக்கிழமை குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் சுரேஷ், தங்கமணி ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT