கரூர்

தேசிய விளையாட்டில் வென்றவா்கள் விளையாட்டு உபகரணம் பெற அழைப்பு

DIN

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கரூா் மாவட்ட வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2018 - 2019- ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வழங்கப்பட உள்ளது. இதில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ.6000- மதிப்பிலும், வெள்ளிப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ.4000 மதிப்பிலும், வெண்கலப்பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 2000 மதிப்பிலும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும். தகுதிபெற்ற விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சான்றிதழ்களுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் வரும் ஏப்.2 -ஆம் தேதிக்குள் நேரடியாக வந்து சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT