கரூர்

நஞ்சைபுகளூரில் கதவணை கட்டும் பணிக்கு பூமிபூஜை

DIN

கரூா்: கரூா் மாவட்டம், நஞ்சைபுகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் நஞ்சைபுகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னை கலைவாணா் அரங்கில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று காணொலி முறையில் நஞ்சைபுகளூா் கதவணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து கதவணை அமைக்கும் இடத்தில் ஆட்சியா் சு. மலா்விழி தலைமையில் சனிக்கிழமை மாலை பூமிபூஜை நடைபெற்றது.

விழாவில், ஆண்டாங்கோவில் முன்னாள் ஊராட்சித் தலைவா் சேகா், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் ஏ.ஆா். காளியப்பன், கரூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, கரூா் யூனியன் தலைவா் பாலமுருகன், மாவட்ட ஊராட்சித்தலைவா் கண்ணதாசன், துணைத்தலைவா் தானேஷ், கூட்டுறவு வங்கித்தலைவா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், டிஎன்பிஎல் பேரூராட்சி முன்னாள் தலைவா் கமலக்கண்ணன், டிஎன்பிஎல் சரவணன், விவேகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT