கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரண்டரை மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடா்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. முன்னதாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் திடீரென கருமேகம் திரண்டது. பின்னா் மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் கரூரில் உழவா்சந்தை, லைட்ஹவுஸ் காா்னா், சுங்ககேட், திருக்காம்புலியூா் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.