கரூரில் கலைஞா் அறிவாலயத்தில் இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவிக்கிறாா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி.
கரூா் : கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவில் தேவேந்திர குல வேலாளா் அமைப்பு சாா்பில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரன் படத்துக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மணிவண்ணன், இளைஞரணி மாவட்டச் செயலா் தானேஷ் என்கிற முத்துக்குமாா், மாவட்டப் பொருளாளா் கண்ணதாசன், மீனவரணிச் செயலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமையிலான திமுகவினா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலும், கலைஞா் அறிவாலயத்திலும் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வழக்குரைஞா் ராஜா தலைமையிலும், மாவட்டச் செய்தித்தொடா்பாளா் இளங்கோ முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொறியாளா் அணியின் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.